திருப்பாடல்கள் 67:1
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
சீராக்கின் ஞானம் 14:1
30. நாவினால் தவறு செய்யாதோர் பேறுபெற்றோர்; அவர்கள் பாவங்களுக்கான மன உறுத்தல் இல்லாதவர்கள்.
சீராக்கின் ஞானம் 51:11
என் மன்றாட்டு கேட்கப்பட்டது. அழிவிலிருந்து நீர் என்னை மீட்டீர்; தீங்கு விளையும் நேரத்திலிருந்து என்னை விடுவித்தீர்.
சீராக்கின் ஞானம் 43:30
ஆண்டவரை மாட்சிப்படுத்துங்கள்; உங்களால் முடியும் அளவிற்கு அவரை உயர்த்துங்கள். ஏனெனில் அவர் அதனினும் மேலானவர். உங்கள் வலிமையெல்லாம் கூட்டி அவரை உயர்த்துங்கள்; சோர்ந்துவிடாதீர்கள்.
சீராக்கின் ஞானம் 39:19
எல்லா மனிதர்களின் செயல்களும் அவர் திருமுன் இருக்கின்றன; அவருடைய கண்களுக்கு மறைவானது ஏதுமில்லை.