1 சாமுவேல் 25:6
அவனை நோக்கி, உமக்கும், உம் குடும்பத்துக்கும், உமக்கு உள்ள அனைத்துக்கும் நலம் உண்டவதாக!
1 அரசர்கள் 5:4
இப்பொழுதோ, என் கடவுளாகிய ஆண்டவர் என் எல்லைகள் எங்கும் அமைதி நிலவும்படி செய்திருக்கிறார். எனக்கு எதிரியுமில்லை; இடையூறுமில்லை.
சீராக்கின் ஞானம் 20:7
ஞானியர் தக்க நேரம் வரும் வரை அமைதி காப்பர்; வீண் பெருமை பேசும் மூடர் சரியான நேரத்தைத் தவறவிடுவர்.
சீராக்கின் ஞானம் 15:19
ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்; மனிதரின் செயல்கள் அனைத்தையும் அவர் அறிவார்.
சீராக்கின் ஞானம் 12:2
இறைப்பற்றுள்ளோருக்கு நன்மை செய்; உனக்குக் கைம்மாறு கிடைக்கும். அவர்களால் இயலாவிடினும் உன்னத இறைவன் கைம்மாறு செய்வார்.
சீராக்கின் ஞானம் 7:32
ஏழைகளுக்குத் தாராளமாய்க் கொடு; இதனால் இறை ஆசி முழுமையாக உனக்குக் கிடைக்கும்;
சீராக்கின் ஞானம் 6:16
நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள்; ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர்.
சீராக்கின் ஞானம் 3:17
குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்; அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர்.
சீராக்கின் ஞானம் 2:6
ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்; அவர் உனக்குத் துணை செய்வார். உன் வழிகளைச் சீர்படுத்து; அவரிடம் நம்பிக்கை கொள்.